திமுக ஆட்சி நிலைக்கக் கூடாது என்பது தான் மக்களின் கனவு” - விஜய் ஆவேசம்....
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்து, உங்கள் கனவைச் சொல்லுங்கள் என மக்களிடம் கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின். மக்களுக்கு நீங்கள் கொடுத்த கனவு என்னவென்றால் பாதுகாப்பு இல்லாத மக்கள் விரோத ஆட்சி தான். திமுக ஆட்சி நிலைக்கக் கூடாது என்பது தான் மக்களின் கனவு” என தவெக தலைவர் விஜய் பேசினார்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் தாளமுத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றநிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்து, உங்கள் கனவைச் சொல்லுங்கள் என மக்களிடம் கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின். மக்களுக்கு நீங்கள் கொடுத்த கனவு என்னவென்றால் பாதுகாப்பு இல்லாத மக்கள் விரோத ஆட்சி தான். திமுக ஆட்சி நிலைக்கக் கூடாது என்பது தான் மக்களின் கனவு” என தவெக தலைவர் விஜய் பேசினார்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் தாளமுத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றநிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது: நம்மை குறைத்து மதிப்பீடு செய்து கேலி, கிண்டல் செய்பவர்களை, அதே விஷயத்தை துணிச்சலுடன், நேர்மறையான புள்ளியில் இருந்து ஆரம்பிப்போம். விஜய் பனையூரை விட்டு வெளியே வரமாட்டாரா என கேள்வி எழுப்புபவர்களுக்கு, தமிழகம் தான் எனது வீடு, 8 கோடி மக்கள் தான் எனது குடும்பம் என்பதை கூறிக்கொள்கிறேன்.
உங்கள் விஜய் ஓட்டுக் கேட்டு வரவில்லை; நீதி கேட்டு வந்துள்ளேன். உங்களுக்கு நீதி கேட்பதற்காக அரசியலுக்கு வந்த நான், இப்போது, நீதிக்காக உங்களைத் தேடி வந்துள்ளேன்.
Comments
No comments yet.